Tuesday, July 05, 2011

OTT - Online Treasure Trail



Pls use this post's comments section to discuss with others for clues etc etc..



You can even find nudges from the moderators if you constantly keep an eye on the comments.



Pls also feel free to post your comments to the mods here !

Thursday, October 09, 2008

பாகம் 4

பாகம் 1 பாகம் 2 பாகம் 3

வெ.கூ -1

ஹாஸ்டல் வாழ்க்கை ஒரு புது அனுபவம் தான். அதுவும் சனி ஞாயர் விடுமுறை நாட்கள் எப்போதும் ஒரு சுவையான அனுபத்தையே தந்தன. பஸ்ட் இயர் என்பதால் ரேச்ற்றிக்ஷங்களும் அதிகம். காலேஜை விட்டு வெளியே போகனும்னாலே பெர்மிஷன் வாங்கனும். ஓரிரெண்டு சின்ன கடைகள் அருகிலேயே இருந்ததால் அத்யாவஸ்ய பொருட்கள் எல்லாம் அங்கேயே கிடைத்துவிடும். ஒரு ஒரு முறையும் தஞ்சாவுருக்கோ இல்லை திருச்சிக்கோ போகவேண்டும் என்றால் ஒரு நல்ல ரீசன் யோசிக்க வேண்டும். ஹேர் கட்டிங் என்றால் அருகில் உள்ள வல்லம் என்னும் கிராமத்திற்கு போக மட்டுமே பெர்மிஷன் கிடைக்கும், அதுவும் இரண்டு மணி நேரம் தான். செருப்பு வாங்கனும், டாக்டர பாக்கணும், அப்படி இப்படி இன்னு எதாவது ஒரு ரீசன் ரெடி பண்ணுவோம், இதுல கடி என்னன்னா நம்ம ஒரு ரீசன் மட்டும் யோசிச்சா போறாது, நம்ம செட்டுல இருக்கற எல்லாருக்கும் ஒரு ஒரு யுனீக் ரீசன் ரெடி பண்ணனும். அப்பறம் நம்ம செட்டுல இருக்கறவங்க எல்லாரும் அடுத்தடுத்து பெர்மிஷன் கேக்கக்கூடாது. ரெண்டு ரெண்டு பேரா பெர்மிஷன் வாங்கிட்டு கோயில்ல போய் வெய்ட் பண்ணனும். காலேஜுக்கு உள்ளேயே இருந்த அந்த கோயில் தான் எங்களுக்கு ஒரு பாதுகாப்பான பிளேஸ், பக்கத்துலையே ஆபீஸ் ரூம் இருந்ததுனால காத்து கருப்பு (செனியர்) அண்டாது.


இந்த மாதிரி ரீசன் கண்டுபிடிப்பது, ஸ்ட்ராடேஜி போடுவதுக்குன்னே நம்ம கிட்ட தான் ஒரு ஆயுதம் இருக்கே. அருணத்தான் சொல்றேன், கிடு கிடுன்னு ஒரு பிளானை போட்டு அதை சூப்பரா எக்சிக்யுட் செய்வது நம்ம ஆளின் தனித்தன்மை. ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே இந்த "வீக் எண்டில் வெளியே போகும் மாயை நீடித்தது" , படம் பார்ப்பதும், ஹோட்டலில் சாபிடுவதும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும். அப்பறம் வீக் எண்டு என்றாலே ரிலாக்ஸ் என்று முடிவு செய்தோம். மதியம் 12 , 1 மணிக்கு பசி வயிற்றை சுண்டி இழுக்கும் வரை தூங்குவோம். எழுந்து பல் தேய்த்துவிட்டு நேராக சாப்பாடு தான். மதியத்தில் பொழுதை போக்க ரூமிலேயே டிடி ஆட ஆரம்பித்தோம். ஒரு ரூமுக்கென்று இருந்த மூன்று ரீடிங் டேபிள்களை போட்டு, பக்கத்து ரோமிலிரிந்து ஒரு டேபிள் இரவல் வாங்கி அதையும் சேர்த்து போட்டு, எவர் சில்வர் தம்பளர்களை அடுக்கி அதன் மேல் சுருட்டிய ஈடி சார்டுகளை ஒட்டி நெட் போல செய்து, நோட் புக்குகளை பெட்டாக வைத்து விளையாடுவோம். 4 , 5 மணிக்கு அன்றைக்கு ஊர் சுத்த போனவர்கள், மற்றும் உற்றார் உறவினரை பார்க்க போனவர்கள் எல்லோரும் ஹாஸ்டல் திரும்புவார்கள், அவர்கள் கொண்டுவரும் பட்சணங்களை மொக்கு மொக்கு என்று மொக்குவோம். சொச்ச நேரத்திற்கு அரட்டை, எங்கள் காலேஜ் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் வெ.கூ , வெட்டி கூட்டம். வெ.கூ க்களில் எல்லார் க்ளாஸ்ளையும் என்ன நடந்துது, ஹாஸ்டல் ஹாட் நியுஸ் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மெயின் மேட்டர் யாரையாவது ஒருத்தரை டார்கெட் செய்து கன்னா பின்னான்னு ஒட்டி தள்ளி அதில் அனைவரும் மனம் மகிழ்வதுதான். இப்படி ஒட்டு வந்குவதர்க்கென்றே வலிய வந்து மாட்டிக்கொள்ளும் ஆட்கள் பலர் ஹாஸ்டலில் இருந்தார்கள்.


இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பது "மேட்டர் ஸ்யாம்", இவனுக்கு எப்படி இந்த பேர் அமைந்தது என்று நினைவில்லை, ஆனால் பேரை பார்த்தால் கெஸ் செய்யும் படியாகத்தான் இருக்கிறது. வெள்ளை வெளேர் என்று உருண்டை கண்ணாடி போட்டுக்கொண்டு, கொழு கொழு வென்று இருப்பன். பார்வைக்கு அப்பாவி பாவம் என்று தொன்றினாலும், செய்யும் வேலையும் பேசும் பேச்சும் கொஞ்சம் டூ மச்சாகத்தான் இருக்கும். இவனுக்கும் இவன் ரூம் மேட் சுஜயிக்கும் என்னைக்கும் சண்டை தான். சுஜையும் லேசு பட்ட ஆளில்லை பெரிய இவன் மாரித்தான் பேசுவான். சுஜைக்கு நண்பர் பலம் அதிகம் இருந்ததால் அனைவரையும் அவன் ரூமுக்கு கூப்பிட்டு நம்ம மேட்டர் ஷ்யாமை கலாய்ப்பன். இவர்களுக்கு பயந்து ஷ்யாம் எங்களிடம் தஞ்சம் புக நாங்கள் அவனை ஆதரித்தோம். "டேய் அந்த சுஜை இனிக்கு என்ன படுத்திடாண்ட" என்று ஷ்யாம் எங்களிடம் வந்து சொல்ல நாங்களும் துற கஜ பதாதிகளுடன் அவன் ரூமுக்கு சென்று எங்கள் வேலையை காட்டுவோம், இதில் நன்மை என்னவென்றால் ஷ்யாம் எப்போதும் நொறுக்கு தீனி ஸ்டாக் வைத்திருப்பான், ஸோ சும்மாவே அவன் ரூமுக்கு போனா சுஜை சந்தேக பாடுவானே அதுனால நாங்க நொறுக்கு தீனி சாப்பட போராமதிரி போவோம். இந்த கேப்புல சுஜை கலாசல் தாங்க முடியாம எங்கள பிரெண்டு புடிக்க அவனோட ஸ்நாக்ஸ் மூட்டையும் பிரிச்சு தருவான். இதுல யார் கிட்ட எவ்வளோ இருக்குன்னு போட்டிவேறு. பூனை ஆப்பம் கதையா வயித்தையும் ரொப்பிக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிசுட்டும் வருவோம்.


Monday, September 29, 2008

தாமதத்திற்கு மன்னிக்கவும் ...

பாகம் 1
பாகம் 2

முதல் முதல் முதல் வரை ... (M3V படம் அல்ல...)

இந்த காலேஜை பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, "ஹாச்டல்ல எல்லா பசங்களும் சந்தி பண்ணிக்கிட்டு இருப்பாங்க" அப்படி பட்ட காலேஜ் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் அந்த கால கட்டத்தில் சந்தி எல்லாம் ரெகுலரா பண்ணிக்கிட்டு இருந்ததால வெடி கார்த்தால எழுந்து பட்ட கிட்ட எல்லாம் போட்டுக்கிட்டு பஞ்ச பத்திரத்தை எடுத்துக்கிட்டு காரிடார்ல சந்தி பண்ண உட்கார்ந்துட்டேன். அப்பறம் புதுசா வாங்கின சொக்கா முழுக்கால் டவுசர் சுடர்மணி உள்ளாடைகள்னு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு டிப் டாப்ஆ எல்லாரும் ரெடி ஆனோம். மேச்சுக்கு போய் கல்லு கல்லா இருந்த மெகா சைஸ் இட்லிகளை ஒரு கட்டு கட்டிவிட்டு 8:40 காலேஜுக்கு ஏழே முக்கலுக்கே போய் ஆஜர் அயிடோம்.

1st இயரில் டிபார்ட்மென்ட் வைஸ் கிளாஸ் இருக்காது, எல்லாரும் அச்சார்டடா ஒரு ஒரு செக்ஷன் ல இருப்பாங்க. அப்படி செக்ஷன் பிரிச்சதுல என்ன "b" செக்ஷன் ல போட்டாங்க, அருணும் அதே செக்ஷன் செக்ஷன் ல தான் இருந்தான், சோ நாங்க ரெண்டு பேரும் மிடில் ரோ ல லாச்டுக்கும் முன்னாடி பெஞ்சை புடிச்சோம்.. ஆக்சுவலி அகொச்டிக்ஸ், மற்றும் காற்று வாட்டம், fan , மறைவான இடம் போன்ற பல மேட்டர்களை கன்சிடர் பண்ணி அருண் அந்த இடத்தை தேர்ந்தேடுதன். அப்பறம் ஒருத்தர் ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க, கூட்டம் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.. அருண் இந்த கப்ல யார் யார் எல்லாம் ஹச்டல்லேந்து வராங்க எந்த ரூம்ன்னு டாடாபேசை அப்டேட் பண்ணிக்கிட்டு இருந்தான். அங்கு ஹோச்டலில் பார்த்த ஒரு ரெண்டு முகங்களும் தென் பட்டன. முதல் அவருக்கு PV என்று ஒரு இங்கிலிபீஸ் பேராசிரியை வந்தாங்க. முதல் கோணல் முற்றும் கொனல்லுங்கர மாதிரி மொதல் வகுப்பே நம்ம வீக் சுப்ஜெக்டுல ஆரம்பிச்சுது. அந்த மேடம் வந்து அவங்கள பத்தியும், காலேஜை பத்தியும் தஸ்ஸு புஸ்ஸுன்னு சொல்லி முடிக்க, அடுத்து, நீண்ட நேரமா நான் பயந்து கிட்டு இருந்த இன்ட்ரோடேக்ஷன் வந்துது, ஊர் பேரு மட்டும் கேட்டுட்டு விட்டுடுவாங்கன்னு நினைச்சா, எல்லாரையும் ஒருத்தர் ஒருத்தரா வந்து இன்ட்ரோடேக்ஷன்னோடு ஏதாவது பேசவும் சொல்லிடாங்க.. ஸ்கூல்ல இங்கிலீஷ் நான்-டீடைல் கிளாஸ் ல எல்லாரையும் ஒன் பை ஒன் பூக்லேந்து படிக்க சொல்லும் போது நான், எப்படா பெல் அடிக்கும், ஒருத்தர் 3 நிமிஷம் படிச்சாங்கன்னா இன்னும் எவ்ளோ பெருக்கப்பரம் நம்ம டர்ன் வரும், அதுக்குள்ள பெல் அடிச்சுடுமா என்று கல்குலேத் பண்ணியதெல்லாம் நினைவுக்கு வந்தது.. அந்த வயிற்றில் புளி கரைக்கும் எபெக்டுடன் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். எல்லா பசங்களும் நீ போ நான் போ என்று குசு குசு என்று பேசிகொண்டிருந்த போது. இதெல்லாம் ஒரு பெரிய மட்டேரா என்கிராற்போல் ஒருவன் ஸ்டேஜ் மேலே ஏறினான். அவன் கிளாசுக்கு வந்ததே லேட்டு அப்பறமும் அவன் நடவடிக்கை எல்லாம் நோட் பண்ணும் போது பெரிய இவன் மாதிரி இருந்தான்..

ஸ்டேஜ் மேலே ஏறி நின்று.. " iam balakrishnan" blah blah blah என்று அங்கங்கே மட்டும் புரிகிறாற்போல் இங்கிலிபீஸில் புகுந்து விளையாடினான்.. எனக்கு புரிந்த கொஞ்சத்தையும், அருணுக்கு புரிந்த மிச்சத்தையும் வைத்து பார்த்ததில், அவன் DAV கோபாலபுரத்தில் +2 படித்ததாக தெரிந்தது.. அவன் பேசும் போது "எங்க ஸ்கூல் ல எல்லாம் யார பார்த்தாலும் ரெண்டு கையையும் கூப்பி நமஸ்தே என்று பணிவோடு சொல்லுவோம், நாங்க எந்த எடத்துக்கு போனாலும் இந்த கில்ச்சரை ஸ்பிரெட் பண்ணுவோம், இனிமே நம்ம எல்லாரும் இப்படி தான் கிரீட் பண்ணிக்கணும் " அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டு இருந்தான். இவனோட பேச்செல்லாம் பார்த்தால் (வடிவேலு சொல்வதை போல்) "இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கே" என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

இவன் பேசிய ஸ்டைலையும் ஆக்சென்டையும் பார்த்தவுடன், என் வயிற்றில் ஒரு 100 கிராம் புளி எக்ஸ்ட்ரா வாக கரைய ஆரம்பித்தது. அப்படி இப்படி எல்லாரும் ஒருத்தர் ஒருத்தரா பேசிக்கிட்டே வந்தாங்க.. நம்ம அருண் பயலும் சட்டுனு எழுந்து போய் எதோ சொல்லிட்டு வந்துட்டான். சரி பெல்லடிகரதுக்கு ரொம்ப நாழி இருக்கு நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்று தீர்மானித்தவுடன் , என்ன சொல்ல போறேன் என்பதை யோசித்து கொண்டு ஓரிரு முறை ரிகர்சலும் செய்து பார்த்தேன். பின் எழுந்து போய் ஸ்டேஜில் நின்றால்.. ஒரு 32 பேர் கொண்ட கும்பல் என்னை உற்று நோக்கிக் கொண்டு இருந்தது. ஹும்ம்ம் பட பட வென்று "india is my contry all indians are my brothers and sisters" என்று எனக்கு தெரிந்த இங்கிலிபீஸில் எதையோ சொல்லிவிட்டு, ஓடிவந்து எனது பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ஒரு வழியாக அந்த கிளாஸ் முடிந்தது. எங்களுடன் அந்த பெஞ்சில் balakrishnanum(dav gopalaburam) ஞானாவும் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மூணு பேர் உட்காரும் பெஞ்சாக இருந்தாலும், எப்படியோ அடிச்சு புடிச்சு நாலு பேர் உட்கார்ந்திருந்தோம், காலம் தான் எங்கள் நால்வரையும்அன்று ஒன்று சேர்த்தது, நாங்கள் நால்வரும் அடுத்த ஒரு வருடம் அந்த b செக்ஷனில் என்ன பாடு படப்போரோம்ன்னோ இல்ல என்ன பாடு படுத்தபோர்ரோம்ன்னோ எங்களுக்கு ஒரு க்லுவே இல்ல.

அடுத்த பதிவில் எங்கள் அட்டகாசங்கள் ஆரம்பம்..


Thursday, September 18, 2008

பாகம் 2 ... - பரமானந்த விகார்..

( பாகம் 1 ..)

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால இன்னிக்கே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

அந்த 3 இன் 1 ஹச்டலின் பெயர் பரமானந்த விகார். எங்களுக்காக அந்த ஹாஸ்டலில் காத்திருந்தது பரமானந்தமா ? இல்லை விகாரமா ? என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். அங்கு ஒரு அழுக்கு வேஷ்டியுடன் , சட்டையில் மேல் பொத்தான்கள் இரண்டை கிழற்றி விட்டபடி ஒருவரை சந்தித்தோம். அவர்தான் அந்த ஹச்டல் வாடன் M. ஷர்மா. லார்ட்ஸ் மைதானத்தில் நெடு நெடு வென வளர்ந்திருக்கும் புற்களைப் போல, அவர் உடம்பு முழுக்க கரு கரு வென ரோமங்கள் முளைத்திருந்தன. சுருக்கமாக சொல்லப்போனால் அவர் உள்ளங்கையில் மட்டும் தன் அவர் தோலை பார்க்க முடிந்தது. அவருக்கு ஒரு மூன்றெழுத்து செல்லப் பேர் வைப்பதில் எங்களுக்கு சிரமமே இல்லை ( அதுதாம்பா 'க' ல ஆரம்பிச்சு 'டி' ல முடியுமே நடூல குஉட வெறும் 'ர' மட்டும் வருமே )

சில கையெழுத்துக்களெல்லாம் போட்ட பின் ரூம் சூஸ் செய்ய புறப்பட்டோம். அருண், ஜெயேன் இருவரும் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டதால் ஒரு சீட் போட்டு வேப்பாங்கன்னு பாத்தா, நம்மளை கயட்டி விட்டுட்டு இன்னொரு பய்யனோட ( ரூம் நோ. 301 ல) செட் போட்டுட்டாங்க. நானும் பல்சும் போய் ஒரு ரூமை சூஸ் பண்ணினோம் ( 329 ). அந்த ரூமில் எங்களோடு தங்க பால்சின் கசினுக்கு சீட் போட்டோம். அவன் பெயர் கு... (சாரி பிரஷாந்த்). மூன்றெழுத்து செல்ல பேரை நேரம் வரும்போது சொல்றேன். அவன் இன்னும் இரண்டு வாரம் கழித்து தன் ஹாஸ்டலுக்கு வருவதாக இருந்தான்.

அப்டி இப்டி எல்லா சாமான்களையும் `செட் ரைட்` பண்ணிட்டு, செட்டில் ஆனோம். அம்மா, அப்பா சோகத்தோடு டாட்டா சொல்லி விட்டு கிளம்பினார்கள். அவர்களை வழி அனுப்பிவிட்டு ஹாஸ்டல் நோக்கி திரும்பினேன். ஏதோ இந்த உலகத்தில் தனியாக என்னை மட்டும் விட்டு விட்டு எல்லாரும் போய் ஒளிந்து கொண்டதைப் போல் ஒரு பீலிங்க்ஸ். தெளும்பிய ஓரிரு கண்ணீர் துளிகளை அங்கேயே உதறிவிட்டு சகஜமாக ஹாஸ்டல் ரூமிற்குள் நுழைந்தேன். நம்ம பால்ஸ் எங்கிருந்தோ என் சோகத்தை ஒட்டு பார்த்துவிட்டு " ரொம்ப வருத்த படர போலிருக்கு. அழுதா மாறி இருக்கு" என்று கேட்டான். அதற்கு வருத்தமா, நானா ?? என்று ஜம்பமாய் பதிலளித்தேன். "டேய் அடங்கு நீ திரும்பி வரும் போது நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன் என்று சொல்லி என் வாயை அடைத்தான். ஹி ஹி ஹி என்று அசடு வழிந்து விட்டு காரிடாரில் நின்று ஹாஸ்டலை சுத்தி பார்த்தோம்.

இந்த ஹாஸ்டல் ஒரு ஹெக்சகன் போல் வடிவம் கொண்டது. இதன் ஆறு சைட்சும் ஆறு விங்க்ஸ். ஒரு தெருவுக்கு ஆறு ரூம் என்று ஒரு பிலோருக்கு 36 ரூம்கள் இருந்தன. மொத்த மூன்று பிலோர்களில் மூன்றாவது மாடியில் பஸ்ட் இயற் பசங்க மட்டும்தான் இருப்பாங்க. கீழ் ப்ளோரில் இருந்து வரும் படிக்கட்டு ஒன்று தான். மூன்றாவது மாடி ஏறியவுடன் இடது பக்கம் 318 ரூமும் வலது பக்கம் 319 ரூமும் இருக்கும். இந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே அந்தப்பக்கம் தான் எங்கள் ரூம் இருந்தது. இரு வழிகளில் எந்த வழியாக வந்தாலும் எங்கள் ரூம் தன் கடைசி. கிரௌண்டு பிலோர் முழுவதும் மெஸ்ஸும் மெஸ் சார்ந்த மக்களும் தங்கி இருந்தார்கள்.

ஏற்கனவே என்னையும் பால்சையும் பார்த்துவிட்டு "இவங்க நல்ல பசங்களா இருக்காங்க இவன்கலோடையே" தங்கிக்கோ என்று சங்கர் அப்பா சொன்னதற்கு, இங்க பிரசாந்துக்கு சீட் போட்டாச்சு என்று சொல்லி விட்டோம். அதனால் அவர் சங்கரை எங்கள் பக்கத்து (330) ரூமையே சூஸ் பண்ண சொன்னார். சங்கர் யாரு ? என்ன ? பய்யன் எப்படி என்று தெரிந்து கொள்ள சும்மா அவனோட பேச்சு குடுத்தோம். பய்யன் கொஞ்சம் புத்திசாலி, ஆனா ரொம்ப அணிமேட்டடா நடந்து கொண்டான். அவனிடம் போசும் போது ஒரு கார்டூன் கேரக்டரிடம் பேசிய அனுவம் போல் இருந்தது. திருநல்வேலியில் ஒரு கிராமத்தில் +2 முடித்திருந்தான். அவன் +2 ல எல்லா சப்ஜெக்ட்களையும் கடம் போட்ட கதைகளும், தாமிரபரணியில் அவன் துள்ளி குதித்து நீச்சலடித்த கதைகளும் என் மனதை கவர்ந்தன. அவன் சொல்வதையும் பேசுவதையும் வைத்து அவன் ஒரு பயங்கர `ஹர்ட் வோர்கேர்` என்று புரிந்தது.

அப்படியே அருண் ஜெயேன் ரூம் 301 க்கு சென்றோம். அங்கு சென்று ஏன் எனக்கு சீட் போடலை என்று பட்டும் படாமலுமாய் வினவி, அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அங்கு அவர்களின் ரூம் மேட் வினோத்தையும் சந்தித்தோம். ரொம்ப மேன்மையானவன் அவன் பஞ்சு என்றால் அவன் தந்தை பூ. பேச்சில் இருவருக்கும் ஒரு நிதானமும், தன்மையும் இருந்தது.

மணி 7 ஆகும் வரை கதைகளெல்லாம் பேசி விட்டு, மெஸ்க்கு சாப்பிட போக தயாரானோம். அன்று மெஸ்சில் என்ன மெனு என்று ஞாபகம் இல்லை. பெரிய தட்டு, சாப்பாட்டிற்கு க்யூ , டிரை சைக்கிளில் வைத்திருந்த ஒரு பெரிய அடுக்கு முழுக்க தயிர் சாதம் எல்லாம் சேர்ந்து ஒரு ஜெயில் எப்பெக்ட் கொடுத்துக் கொண்டு இருந்தன. பொதுவாக நாய்களையோ ( மற்ற பிராணிகளையோ) நாம் கண்ணோடு கண் பார்த்தால் வள் என்று குறைக்கும். அது தன்னை இவன் செலேஞ்சு செய்கிறான் என்று நினைத்துக்கொள்ளும் என்று அறுவியல் ஆய்வு சொல்கிறது. அதுபோல ஃப்ரெஸ்ஹெராக நாங்கள் முதல் முதலில் கற்றுக் கொண்டது "நிலம் பார்த்த நடை". சுற்றி முற்றி தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் யாரிருந்தலும், யாரையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை மட்டும் பார்த்து நடப்பது. அப்படித் தப்பித்தவறி நிமிர்ந்தாலும் யாரையும் கண்ணோடு கண் மட்டும் பார்த்து விடக்கூடாது. அடுத்த வினாடியே தட்டை எடுத்துக்கொண்டு அவன் டேபுளுக்கு நம்மை வர சொல்லி விடுவான் அந்த சீனியர்.

சாப்பாடு முடிந்து, யாரிடமும் மாட்டாமல் ரூமுக்கு திரிம்பினோம். அப்போது எங்கள் ரூமில் பீப் பீப் என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது, என்ன சத்தம் என்று எங்களால் கணிக்கவே முடியவில்லை, என்னவோ எதோ என்று சற்று பதறியே போனோம். ஒரு ஒரு பையாக தேடித்தேடி கடைசியில் ஒரு பிரவுன் பையில் இருந்து அந்த சத்தம் வருவதை கண்டு பிடித்தோம். "டேய் பால்ஸ் இது உன்னுது தானே" என்று கேட்டதற்கு. இந்தப் திங்க்ஸ் எல்லாம் பிரஷாந்தோடது. ஆனா நான் தான் எடுத்து கிட்டு வந்தேன் என்றான். பூட்டி இருந்த பேகுக்கு சாவியும் அவனிடத்தில் இல்லை. உன் கசின்னு சொன்ன பெரிய டெரெரிச்டா இருப்பான் போல இருக்கு, டைம் பாம் சவுண்டெல்லாம் வருது என்று சொல்லி சிரித்துக்கொண்டோம். கடைசியில் அந்த பையை நகத்தி ஒருட்டியத்தில் சத்தம் நின்றது. ஆனால் 5 நிமிடங்கள் கழித்து சத்தம் மறுபடியும் ஆரம்பித்தவுடன் தான் அது அலாரம் டைம்பீஸ், நம்ம பையா திருப்பும்போது ச்நூஸ் பட்டனை அமித்தி இருக்கோம்னு ஸ்டிரைக் ஆச்சு. பின்பு மெல்ல அந்த பையின் ஜிப்பை விலக்கி இரு விரல்கள் போகும் அளவுக்கு கேப் ரெடி பண்ணி பாமை difuse செய்தோம். பின் கீழே சென்று கேனிலிருந்து பால் பிடித்துக் குடித்து விட்டு 9 மணிக்கு முன்னரே கட்டையை சாய்த்து விட்டோம். நாளைக்கு வேற முதல் நாள் காலேஜ் போகணுமே ....

பயணம் தொடரும்...



Labels:

Sunday, September 14, 2008

ஷன்முகபுரம்


அய்யா டுபுக்கின் பிலாகை படிக்கும் போதெல்லாம், எனது வாழ்க்கையில் நடந்த சில வேடிக்கையான நிகழ்ச்சிகளை தொகுக்க வேண்டும் என்று ஒரு ஆற்வம் என்னுள் தோன்றி மறையும். இந்த போஸ்ட்டின் மூலம் அந்த தொகுப்பை தொடங்க முனைகிறேன்.

பத்தாவது முடித்து, வெகேஷனில் ஊருக்கு சென்றிருந்த போது, அடுத்தது என்னடா படிக்கபோர என்று எல்லோரும் கேட்டதுக்கு பெக்க பெக்க என்று தேவாங்கு போல் முழித்தேன், +1 க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்துக்கோ அப்பறம் இன்ஜினியரிங் ஜோஇன் பண்ணு என்று என் வாழ்க்கைக்கு திசை கட்டியது என் பெரிய மன்னி தான். பட பட வென்று பேசினாலும், எல்லா விஷயத்தையும், தெள்ளத்தெளிவாக, தேங்காயை உடைத்தார் போல் சொல்லும் பழக்கம் என் மன்னிக்கு உண்டு. மனதில் இந்த எண்ணம் ஆழமாக பதிந்ததாலும், அதை பற்றி தீவிரமாக யோசிக்க சோம்பலாக இருந்ததாலும், இன்ஜினியரிங் திசையை நோக்கி பயணிக்க தொடங்கினேன்.

+2 ரிசல்ட் வெளியானவுடன் கட் ஆப் மார்க்கை வைத்து தோராயமாக கணித்து பார்த்ததில், என் செட்டில் ஒரு நான்கு, ஐந்து பேருக்கு ஒரே காலேஜில் சீட் கிடைக்கும் போல் இருந்தது. எனவே நான், ஜயேன், அருண், பால்ஸ் அனைவரும் செட் போட்டுக் கொண்டு ஷன்முகபுரத்தை தேர்ந்தெடுக்க ஆயத்தமானோம்.

நம்ம பய அருண் விசு மாதிரி, அவர் அனைத்து கல்யாண பிரச்சனைகள், குடும்ப உட்பூசல்கள் எல்லாத்திலும் புகுந்து ஒரு ச்ட்ராடெஜி போடுவதை போல், ஸ்கூல் பிரச்சனைகள் அனைத்திலும் ச்ட்ராடெஜி போடுவது தான் இவன் வேலை. அதிலும் முக்கால் வாசி நேரம் குழப்பத்தில் இருக்கும் பலரையும் தான் எடுத்த டெசிஷனை பின்பற்றுமாறு கன்வின்ஸ் செய்வதில் கெட்டிக்காரன். அதுபோல சமுக சேவையில் ஈடுபட்டு ஷன்முகபுரத்திற்கு வருவதற்கு அனைவரையும் ச்ட்ராங்காக கன்வின்ஸ் செய்த பெருமை இவனையே சாரும்.

ஜயேனும் நானும் டிடி தொச்த்துகள். ஹிந்தி வகுப்பு என்றாலே எங்களுக்கு அலர்ஜி அதுவும் ஸ்கூல் முடிந்தவுடன் வைவா வெர்சி கிளாஸ் என்றால் எதோ எங்கள வையரதுக்குன்னே வெச்ச கிளாஸ் மாதிரி இருக்கும், இந்த மாறி சிச்சுவேஷன்ல நாங்க எஸ்கேப் ஆயுடுவோம். 3:10 க்கு ஸ்கூல் விட்டவுடன் டிடி ரூம்க்கு போய் 5:30, 6 மணி வரை வேர்த்து கொட்ட கொட்ட விளையாடி தீர்ப்போம். டிரஸ் எல்லாம் நனைந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது ஹிந்தி கிளாஸ் முடிந்து வரும் ஜிஇடம் பலமுறை மாட்டி இருக்கிறோம். அப்போதெல்லாம் தப தப வென்று ஓடிவிடவும் முடியாது, அதனால் இதுவரை போன ஜென்மத்தில் கூட பார்க்காதவரை போல் அவரை கண்டு கொள்ளாமல், அவர் கிழக்கே போனால் நாங்கள் மேற்கே எஸ்கேப் ஆகிவிடுவோம்.

பால்ஸ் ஐந்தாவதிலிருந்தே என்னுடன் சேர்ந்து படித்தவன். படிப்பில் படு சுட்டி என்றாலும் அப்போதெல்லாம் அடிமட்ட கஞ்சன். அவனோட ஓட்ட சைக்கிளை கிண்டல் செய்யாத ஆளே ஸ்கூலில் இல்லை. ஆனாலும் இதைஎல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டன். ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பான்.

இப்படி ஒரு படையாக ஷன்முகபுரத்தை அப்ரோச் ஆனோம். பீஸ் எல்லாம் கட்டிய பின் ஹச்டல் ரூம் சூஸ் பண்ண ஹாஸ்டலில் நுழைந்தோம். அப்போது ...

--> பயணம் தொடரும் ...

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால friday வே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

Labels: , , ,

பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ...

இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு சுத்தி முத்தி இருக்கற பிள்ளையார் எல்லாரையும் பார்க்கலாம்னு புறப்பட்டோம், அப்போதான் தெரிஞ்சுது எங்க லோகாளிட்டியிலேயே அம்பது புள்ளையார் சிலைகளுக்கு மேல் வெச்சுருக்காங்கன்னு !! நாங்க பார்த்த புள்ளையார் சிலைகள் உங்கள் பார்வைக்கு ..



Thursday, September 27, 2007

Week end work ...


My latest weekend work...

our fav chota hanuman...
A Bike ride to pondy ...

We (me and my better half) have been always dreaming
about a bike ride on the ecr. And when we were just 2 weeks
before our Leh trip (aug 10th), we thought this would be the
right time to test our stamina and give our bodies
some exercise. The thought came in just 2 days before the
weekend (28th, 29th july), and we were cool coz pondy was
very near by and we thought we neednt plan much for this
trip atleast ( considering the fact that we were already
doing a lot of planning for our leh trip ). But when we
tried calling all the decent hotels around pondy, rooms
were unavailable in most of them. And the few hotels that
had rooms were really expensive and din fit to our budget.

Advice #1 :- if you are going to pondy book your rooms
in advance atleast 2 weeks before ur trip. Coz all the
rooms are booked for all the weekends normally.

Finally we got confirmation for a room in a guest house
(ganga guest house). We consoled ourselves saying, in
the worst case scenario if we din like that place we
will find another one after reaching pondy, coz our high
point was to travel by bike. We din want to visit
too many places in pondy.

Our plan was to start on the 28th early in the morning,
Reach pondy as early as possible, find a place to stay,
take some rest, finish lunch, visit auroville (with in 10km from pondy)
in the late afternoon, visit the beach in the evening, back to the hotel,
get a good night sleep. Visit manakula vinayagar (famous ganesha temple )
temple and ashram in the morning, leave pondy at 11 and reach our place
in ashok nagar at 4 / 5 in the evening.



As per our plan we had given my vandi for service.
Got it back, it was looking great, "tank full ". Saturday morning
we woke up early in the morning took bath and left our place at 5
just when the light started to come. We drove at a moderate
speed, and we enjoyed the ride with the chill air blowing on to
our face. Both of us were wearing helmets. We stopped near VGP
for a few snaps. By that time it was 6.30 and we were hungry
and wanted to stop somewhere for breakfast, we were close to
mahabalipuram and there was a hotel called "hotel mamala" on
the main road just a km before mahabalipuram. We went inside
the hotel parked our vandi, settled down nicely only to find
out that there was no breakfast but they served only tea and
coffee at that time. So we started from that place and proceeded
in search of the next nearest hotel. We knew that there would
be a deviation in the road that would lead us to the heart of
mahabalipuram and we would have hotels there, but unfortunately
we missed that road. We went on and on and din find even small
traces of any eateires. But after 5 to 10 km, we found a nice
little shop and we stopped there to find ourselves among hot
delicious idlies and vada. And our bill was just Rs 20 for how
many ever idlies we ate J.We realised that it was our luck that
we din have breakfast in the hotel mamala and we missed the road
to mahabalipuram.

It was a cool ride, we paused on the way quite a few times to
capture the nice roads, the different shades of green on either
side and a few children on the road. Every turn was exiciting.


As we started early it was not hot at all, sun was just coming
out slowly. The full stretch of the road is done nicely, except
the last patch of 20 kms. We were covering 40 km in an hour,
we knew that we can do it slowly and steadily and we found it
to be very comfortable. We reached pondy at around 9:30. We called
up Ram international to find out that they had a single room and
we took it, coz we read that it was a decent place (yes we ditched
the guest house). We then went on to take some rest before we had
our lunch and started to auroville...
Happy Bikers ...

to be cont...

Tuesday, September 19, 2006

Weekend Work

Hi hi hi hi...
i know its long time since i updated
my blog..
This is probably the nxt episode of "weekend work"



lets start with our pullayar !!! (which me and my sister
made for this pulayar chadurthy!!)



one mini version for my sisters office



submarine - "waste bottles, glue and a few colours"



a closer look!!! ;)



My factory ;)



small toy.. if you pull the strings.. the birds will start pecking!!!
courtesy : MAD (worlds best TV show {pogo))




Let me switch over to tamil for this description alone!
saravana stores, chennai silks etc etc la ellam oru saaku pai kudupangala
with katta handle athula paint panninadu :)



clay - penstand !!!
courtesy : MAD




chummave OM clock!!