Sunday, July 16, 2006

மரணம்


பூக்கசக்கும் பூவுலகோர்

புருவங்கள் மேலுயர, சிறுமிகள் கண்சுருக்க
வயோதிகர் ஓரிருவர் நெற்றியில் கைப்பதிக்க
கல் நெஞ்சுக் காமுகர்கள் காளையனை பரிகசிக்க
தாயின் அலரல் சத்தம்

மூவேளை, தண்ணீரை சாப்பாடாய் நம்புபவர்
பசியாலே கசிவுற்ற ஆண்மகன்கள் இரு நால்வர்
தட்டினிலே சுகம்கான முடியாத காளையர்கள்
கட்டிலிலே சுகம்கான நினைப்பதுதான் பழக்கமன்றோ

காசுபணம் கையிலில்லை
தாய்க்கு, காதலிலே இன்பமில்லை
நள்ளிரவில் கிசு கிசுத்து
காதலுக்கு அழைப்பு விடும்
காதலனின் ஆசைத்தீயை அனைத்துவிட மனமுமில்லை

காமுகனின் துடிதுடிக்கும் கைகளில் அகப்பட்டு
ஈரைந்து மாதம் பின்னே வலிகளில் அவதிப்பட்டு
பெற்றெடுத்த பொட்டை ஒன்றின் தலையெழுத்தோ
ஓர் வரி தான்

"மரணம்"

நீ குடிக்கும் முதல் பாலில் நஞ்சு தெளித்தவன்
உன் தந்தையே அல்ல

பாலில் நஞ்சு கலந்தவன்
இறைவனே அல்ல...


இது தேன்கூடு கான்டெஸ்டுக்காக, அதுனால எல்லாம் ஓட்டு போடுங்க புன்னியமா போகும்...

1 Comments:

Blogger வடிவேல்(Vadivel) said...

Grt stuff da Anath!!! really good!

8:01 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home