Sunday, September 14, 2008

ஷன்முகபுரம்


அய்யா டுபுக்கின் பிலாகை படிக்கும் போதெல்லாம், எனது வாழ்க்கையில் நடந்த சில வேடிக்கையான நிகழ்ச்சிகளை தொகுக்க வேண்டும் என்று ஒரு ஆற்வம் என்னுள் தோன்றி மறையும். இந்த போஸ்ட்டின் மூலம் அந்த தொகுப்பை தொடங்க முனைகிறேன்.

பத்தாவது முடித்து, வெகேஷனில் ஊருக்கு சென்றிருந்த போது, அடுத்தது என்னடா படிக்கபோர என்று எல்லோரும் கேட்டதுக்கு பெக்க பெக்க என்று தேவாங்கு போல் முழித்தேன், +1 க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்துக்கோ அப்பறம் இன்ஜினியரிங் ஜோஇன் பண்ணு என்று என் வாழ்க்கைக்கு திசை கட்டியது என் பெரிய மன்னி தான். பட பட வென்று பேசினாலும், எல்லா விஷயத்தையும், தெள்ளத்தெளிவாக, தேங்காயை உடைத்தார் போல் சொல்லும் பழக்கம் என் மன்னிக்கு உண்டு. மனதில் இந்த எண்ணம் ஆழமாக பதிந்ததாலும், அதை பற்றி தீவிரமாக யோசிக்க சோம்பலாக இருந்ததாலும், இன்ஜினியரிங் திசையை நோக்கி பயணிக்க தொடங்கினேன்.

+2 ரிசல்ட் வெளியானவுடன் கட் ஆப் மார்க்கை வைத்து தோராயமாக கணித்து பார்த்ததில், என் செட்டில் ஒரு நான்கு, ஐந்து பேருக்கு ஒரே காலேஜில் சீட் கிடைக்கும் போல் இருந்தது. எனவே நான், ஜயேன், அருண், பால்ஸ் அனைவரும் செட் போட்டுக் கொண்டு ஷன்முகபுரத்தை தேர்ந்தெடுக்க ஆயத்தமானோம்.

நம்ம பய அருண் விசு மாதிரி, அவர் அனைத்து கல்யாண பிரச்சனைகள், குடும்ப உட்பூசல்கள் எல்லாத்திலும் புகுந்து ஒரு ச்ட்ராடெஜி போடுவதை போல், ஸ்கூல் பிரச்சனைகள் அனைத்திலும் ச்ட்ராடெஜி போடுவது தான் இவன் வேலை. அதிலும் முக்கால் வாசி நேரம் குழப்பத்தில் இருக்கும் பலரையும் தான் எடுத்த டெசிஷனை பின்பற்றுமாறு கன்வின்ஸ் செய்வதில் கெட்டிக்காரன். அதுபோல சமுக சேவையில் ஈடுபட்டு ஷன்முகபுரத்திற்கு வருவதற்கு அனைவரையும் ச்ட்ராங்காக கன்வின்ஸ் செய்த பெருமை இவனையே சாரும்.

ஜயேனும் நானும் டிடி தொச்த்துகள். ஹிந்தி வகுப்பு என்றாலே எங்களுக்கு அலர்ஜி அதுவும் ஸ்கூல் முடிந்தவுடன் வைவா வெர்சி கிளாஸ் என்றால் எதோ எங்கள வையரதுக்குன்னே வெச்ச கிளாஸ் மாதிரி இருக்கும், இந்த மாறி சிச்சுவேஷன்ல நாங்க எஸ்கேப் ஆயுடுவோம். 3:10 க்கு ஸ்கூல் விட்டவுடன் டிடி ரூம்க்கு போய் 5:30, 6 மணி வரை வேர்த்து கொட்ட கொட்ட விளையாடி தீர்ப்போம். டிரஸ் எல்லாம் நனைந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது ஹிந்தி கிளாஸ் முடிந்து வரும் ஜிஇடம் பலமுறை மாட்டி இருக்கிறோம். அப்போதெல்லாம் தப தப வென்று ஓடிவிடவும் முடியாது, அதனால் இதுவரை போன ஜென்மத்தில் கூட பார்க்காதவரை போல் அவரை கண்டு கொள்ளாமல், அவர் கிழக்கே போனால் நாங்கள் மேற்கே எஸ்கேப் ஆகிவிடுவோம்.

பால்ஸ் ஐந்தாவதிலிருந்தே என்னுடன் சேர்ந்து படித்தவன். படிப்பில் படு சுட்டி என்றாலும் அப்போதெல்லாம் அடிமட்ட கஞ்சன். அவனோட ஓட்ட சைக்கிளை கிண்டல் செய்யாத ஆளே ஸ்கூலில் இல்லை. ஆனாலும் இதைஎல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டன். ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பான்.

இப்படி ஒரு படையாக ஷன்முகபுரத்தை அப்ரோச் ஆனோம். பீஸ் எல்லாம் கட்டிய பின் ஹச்டல் ரூம் சூஸ் பண்ண ஹாஸ்டலில் நுழைந்தோம். அப்போது ...

--> பயணம் தொடரும் ...

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால friday வே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

Labels: , , ,

4 Comments:

Blogger Yesgee said...

the return of the dragon... welcome...

10:08 PM  
Blogger Unknown said...

hey hi!!! its really a good effort by u to recollect ur college days!!! super po!! enakku kavidhayalam pesa theriyadhu!! so na enna solla varenna ....... KEEP UP THE GUD WORK!!!!

7:03 AM  
Blogger Balaji said...

dei!! enna da flashbackah may i come in!! nalla iruku machan. arambi arambi namba kadhaiyellam thandavalam aerattum.
mutrilum maru patta konathila kamika poriya nanba? arambamay super. dhool kelappu

11:50 AM  
Blogger Mahadevan said...

Good one da..Keep writing!

10:49 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home