Thursday, September 18, 2008

பாகம் 2 ... - பரமானந்த விகார்..

( பாகம் 1 ..)

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால இன்னிக்கே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

அந்த 3 இன் 1 ஹச்டலின் பெயர் பரமானந்த விகார். எங்களுக்காக அந்த ஹாஸ்டலில் காத்திருந்தது பரமானந்தமா ? இல்லை விகாரமா ? என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். அங்கு ஒரு அழுக்கு வேஷ்டியுடன் , சட்டையில் மேல் பொத்தான்கள் இரண்டை கிழற்றி விட்டபடி ஒருவரை சந்தித்தோம். அவர்தான் அந்த ஹச்டல் வாடன் M. ஷர்மா. லார்ட்ஸ் மைதானத்தில் நெடு நெடு வென வளர்ந்திருக்கும் புற்களைப் போல, அவர் உடம்பு முழுக்க கரு கரு வென ரோமங்கள் முளைத்திருந்தன. சுருக்கமாக சொல்லப்போனால் அவர் உள்ளங்கையில் மட்டும் தன் அவர் தோலை பார்க்க முடிந்தது. அவருக்கு ஒரு மூன்றெழுத்து செல்லப் பேர் வைப்பதில் எங்களுக்கு சிரமமே இல்லை ( அதுதாம்பா 'க' ல ஆரம்பிச்சு 'டி' ல முடியுமே நடூல குஉட வெறும் 'ர' மட்டும் வருமே )

சில கையெழுத்துக்களெல்லாம் போட்ட பின் ரூம் சூஸ் செய்ய புறப்பட்டோம். அருண், ஜெயேன் இருவரும் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டதால் ஒரு சீட் போட்டு வேப்பாங்கன்னு பாத்தா, நம்மளை கயட்டி விட்டுட்டு இன்னொரு பய்யனோட ( ரூம் நோ. 301 ல) செட் போட்டுட்டாங்க. நானும் பல்சும் போய் ஒரு ரூமை சூஸ் பண்ணினோம் ( 329 ). அந்த ரூமில் எங்களோடு தங்க பால்சின் கசினுக்கு சீட் போட்டோம். அவன் பெயர் கு... (சாரி பிரஷாந்த்). மூன்றெழுத்து செல்ல பேரை நேரம் வரும்போது சொல்றேன். அவன் இன்னும் இரண்டு வாரம் கழித்து தன் ஹாஸ்டலுக்கு வருவதாக இருந்தான்.

அப்டி இப்டி எல்லா சாமான்களையும் `செட் ரைட்` பண்ணிட்டு, செட்டில் ஆனோம். அம்மா, அப்பா சோகத்தோடு டாட்டா சொல்லி விட்டு கிளம்பினார்கள். அவர்களை வழி அனுப்பிவிட்டு ஹாஸ்டல் நோக்கி திரும்பினேன். ஏதோ இந்த உலகத்தில் தனியாக என்னை மட்டும் விட்டு விட்டு எல்லாரும் போய் ஒளிந்து கொண்டதைப் போல் ஒரு பீலிங்க்ஸ். தெளும்பிய ஓரிரு கண்ணீர் துளிகளை அங்கேயே உதறிவிட்டு சகஜமாக ஹாஸ்டல் ரூமிற்குள் நுழைந்தேன். நம்ம பால்ஸ் எங்கிருந்தோ என் சோகத்தை ஒட்டு பார்த்துவிட்டு " ரொம்ப வருத்த படர போலிருக்கு. அழுதா மாறி இருக்கு" என்று கேட்டான். அதற்கு வருத்தமா, நானா ?? என்று ஜம்பமாய் பதிலளித்தேன். "டேய் அடங்கு நீ திரும்பி வரும் போது நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன் என்று சொல்லி என் வாயை அடைத்தான். ஹி ஹி ஹி என்று அசடு வழிந்து விட்டு காரிடாரில் நின்று ஹாஸ்டலை சுத்தி பார்த்தோம்.

இந்த ஹாஸ்டல் ஒரு ஹெக்சகன் போல் வடிவம் கொண்டது. இதன் ஆறு சைட்சும் ஆறு விங்க்ஸ். ஒரு தெருவுக்கு ஆறு ரூம் என்று ஒரு பிலோருக்கு 36 ரூம்கள் இருந்தன. மொத்த மூன்று பிலோர்களில் மூன்றாவது மாடியில் பஸ்ட் இயற் பசங்க மட்டும்தான் இருப்பாங்க. கீழ் ப்ளோரில் இருந்து வரும் படிக்கட்டு ஒன்று தான். மூன்றாவது மாடி ஏறியவுடன் இடது பக்கம் 318 ரூமும் வலது பக்கம் 319 ரூமும் இருக்கும். இந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே அந்தப்பக்கம் தான் எங்கள் ரூம் இருந்தது. இரு வழிகளில் எந்த வழியாக வந்தாலும் எங்கள் ரூம் தன் கடைசி. கிரௌண்டு பிலோர் முழுவதும் மெஸ்ஸும் மெஸ் சார்ந்த மக்களும் தங்கி இருந்தார்கள்.

ஏற்கனவே என்னையும் பால்சையும் பார்த்துவிட்டு "இவங்க நல்ல பசங்களா இருக்காங்க இவன்கலோடையே" தங்கிக்கோ என்று சங்கர் அப்பா சொன்னதற்கு, இங்க பிரசாந்துக்கு சீட் போட்டாச்சு என்று சொல்லி விட்டோம். அதனால் அவர் சங்கரை எங்கள் பக்கத்து (330) ரூமையே சூஸ் பண்ண சொன்னார். சங்கர் யாரு ? என்ன ? பய்யன் எப்படி என்று தெரிந்து கொள்ள சும்மா அவனோட பேச்சு குடுத்தோம். பய்யன் கொஞ்சம் புத்திசாலி, ஆனா ரொம்ப அணிமேட்டடா நடந்து கொண்டான். அவனிடம் போசும் போது ஒரு கார்டூன் கேரக்டரிடம் பேசிய அனுவம் போல் இருந்தது. திருநல்வேலியில் ஒரு கிராமத்தில் +2 முடித்திருந்தான். அவன் +2 ல எல்லா சப்ஜெக்ட்களையும் கடம் போட்ட கதைகளும், தாமிரபரணியில் அவன் துள்ளி குதித்து நீச்சலடித்த கதைகளும் என் மனதை கவர்ந்தன. அவன் சொல்வதையும் பேசுவதையும் வைத்து அவன் ஒரு பயங்கர `ஹர்ட் வோர்கேர்` என்று புரிந்தது.

அப்படியே அருண் ஜெயேன் ரூம் 301 க்கு சென்றோம். அங்கு சென்று ஏன் எனக்கு சீட் போடலை என்று பட்டும் படாமலுமாய் வினவி, அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அங்கு அவர்களின் ரூம் மேட் வினோத்தையும் சந்தித்தோம். ரொம்ப மேன்மையானவன் அவன் பஞ்சு என்றால் அவன் தந்தை பூ. பேச்சில் இருவருக்கும் ஒரு நிதானமும், தன்மையும் இருந்தது.

மணி 7 ஆகும் வரை கதைகளெல்லாம் பேசி விட்டு, மெஸ்க்கு சாப்பிட போக தயாரானோம். அன்று மெஸ்சில் என்ன மெனு என்று ஞாபகம் இல்லை. பெரிய தட்டு, சாப்பாட்டிற்கு க்யூ , டிரை சைக்கிளில் வைத்திருந்த ஒரு பெரிய அடுக்கு முழுக்க தயிர் சாதம் எல்லாம் சேர்ந்து ஒரு ஜெயில் எப்பெக்ட் கொடுத்துக் கொண்டு இருந்தன. பொதுவாக நாய்களையோ ( மற்ற பிராணிகளையோ) நாம் கண்ணோடு கண் பார்த்தால் வள் என்று குறைக்கும். அது தன்னை இவன் செலேஞ்சு செய்கிறான் என்று நினைத்துக்கொள்ளும் என்று அறுவியல் ஆய்வு சொல்கிறது. அதுபோல ஃப்ரெஸ்ஹெராக நாங்கள் முதல் முதலில் கற்றுக் கொண்டது "நிலம் பார்த்த நடை". சுற்றி முற்றி தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் யாரிருந்தலும், யாரையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை மட்டும் பார்த்து நடப்பது. அப்படித் தப்பித்தவறி நிமிர்ந்தாலும் யாரையும் கண்ணோடு கண் மட்டும் பார்த்து விடக்கூடாது. அடுத்த வினாடியே தட்டை எடுத்துக்கொண்டு அவன் டேபுளுக்கு நம்மை வர சொல்லி விடுவான் அந்த சீனியர்.

சாப்பாடு முடிந்து, யாரிடமும் மாட்டாமல் ரூமுக்கு திரிம்பினோம். அப்போது எங்கள் ரூமில் பீப் பீப் என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது, என்ன சத்தம் என்று எங்களால் கணிக்கவே முடியவில்லை, என்னவோ எதோ என்று சற்று பதறியே போனோம். ஒரு ஒரு பையாக தேடித்தேடி கடைசியில் ஒரு பிரவுன் பையில் இருந்து அந்த சத்தம் வருவதை கண்டு பிடித்தோம். "டேய் பால்ஸ் இது உன்னுது தானே" என்று கேட்டதற்கு. இந்தப் திங்க்ஸ் எல்லாம் பிரஷாந்தோடது. ஆனா நான் தான் எடுத்து கிட்டு வந்தேன் என்றான். பூட்டி இருந்த பேகுக்கு சாவியும் அவனிடத்தில் இல்லை. உன் கசின்னு சொன்ன பெரிய டெரெரிச்டா இருப்பான் போல இருக்கு, டைம் பாம் சவுண்டெல்லாம் வருது என்று சொல்லி சிரித்துக்கொண்டோம். கடைசியில் அந்த பையை நகத்தி ஒருட்டியத்தில் சத்தம் நின்றது. ஆனால் 5 நிமிடங்கள் கழித்து சத்தம் மறுபடியும் ஆரம்பித்தவுடன் தான் அது அலாரம் டைம்பீஸ், நம்ம பையா திருப்பும்போது ச்நூஸ் பட்டனை அமித்தி இருக்கோம்னு ஸ்டிரைக் ஆச்சு. பின்பு மெல்ல அந்த பையின் ஜிப்பை விலக்கி இரு விரல்கள் போகும் அளவுக்கு கேப் ரெடி பண்ணி பாமை difuse செய்தோம். பின் கீழே சென்று கேனிலிருந்து பால் பிடித்துக் குடித்து விட்டு 9 மணிக்கு முன்னரே கட்டையை சாய்த்து விட்டோம். நாளைக்கு வேற முதல் நாள் காலேஜ் போகணுமே ....

பயணம் தொடரும்...



Labels:

5 Comments:

Blogger Unknown said...

hmmm the stuff goes interesting!!!

12:37 AM  
Blogger Yesgee said...

machi eppadi da unaku ellam nyabagam iruku... of course, interesting'a irukungarathu vera matter... prashanth'um bals'um cousins'ngara matter enaku ippo than theriyum... :).. so its informative too...

1:04 PM  
Blogger anantha-krishnan said...

இந்த போச்டுகளை பாலோ பண்ணி கமெண்ட் எல்லாம் போட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆரம்பிக்கும் போது எவனுமே மதிக்காம போய்ட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம் இருந்தது. உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மொடிவேடிங்கா இருக்கு. அடுத்த போச்டுக்காக காத்திருங்கள் கூடிய விரைவில் வெளி இடுகிறேன்.

10:26 PM  
Blogger Mahadevan said...

I was looking for ur next post today being a monday ! But i was not able to locate one :)

8:57 AM  
Blogger anantha-krishnan said...

sorry da.. tight schedule !
will post it asap

8:05 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home