Monday, September 29, 2008

தாமதத்திற்கு மன்னிக்கவும் ...

பாகம் 1
பாகம் 2

முதல் முதல் முதல் வரை ... (M3V படம் அல்ல...)

இந்த காலேஜை பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, "ஹாச்டல்ல எல்லா பசங்களும் சந்தி பண்ணிக்கிட்டு இருப்பாங்க" அப்படி பட்ட காலேஜ் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் அந்த கால கட்டத்தில் சந்தி எல்லாம் ரெகுலரா பண்ணிக்கிட்டு இருந்ததால வெடி கார்த்தால எழுந்து பட்ட கிட்ட எல்லாம் போட்டுக்கிட்டு பஞ்ச பத்திரத்தை எடுத்துக்கிட்டு காரிடார்ல சந்தி பண்ண உட்கார்ந்துட்டேன். அப்பறம் புதுசா வாங்கின சொக்கா முழுக்கால் டவுசர் சுடர்மணி உள்ளாடைகள்னு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு டிப் டாப்ஆ எல்லாரும் ரெடி ஆனோம். மேச்சுக்கு போய் கல்லு கல்லா இருந்த மெகா சைஸ் இட்லிகளை ஒரு கட்டு கட்டிவிட்டு 8:40 காலேஜுக்கு ஏழே முக்கலுக்கே போய் ஆஜர் அயிடோம்.

1st இயரில் டிபார்ட்மென்ட் வைஸ் கிளாஸ் இருக்காது, எல்லாரும் அச்சார்டடா ஒரு ஒரு செக்ஷன் ல இருப்பாங்க. அப்படி செக்ஷன் பிரிச்சதுல என்ன "b" செக்ஷன் ல போட்டாங்க, அருணும் அதே செக்ஷன் செக்ஷன் ல தான் இருந்தான், சோ நாங்க ரெண்டு பேரும் மிடில் ரோ ல லாச்டுக்கும் முன்னாடி பெஞ்சை புடிச்சோம்.. ஆக்சுவலி அகொச்டிக்ஸ், மற்றும் காற்று வாட்டம், fan , மறைவான இடம் போன்ற பல மேட்டர்களை கன்சிடர் பண்ணி அருண் அந்த இடத்தை தேர்ந்தேடுதன். அப்பறம் ஒருத்தர் ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க, கூட்டம் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.. அருண் இந்த கப்ல யார் யார் எல்லாம் ஹச்டல்லேந்து வராங்க எந்த ரூம்ன்னு டாடாபேசை அப்டேட் பண்ணிக்கிட்டு இருந்தான். அங்கு ஹோச்டலில் பார்த்த ஒரு ரெண்டு முகங்களும் தென் பட்டன. முதல் அவருக்கு PV என்று ஒரு இங்கிலிபீஸ் பேராசிரியை வந்தாங்க. முதல் கோணல் முற்றும் கொனல்லுங்கர மாதிரி மொதல் வகுப்பே நம்ம வீக் சுப்ஜெக்டுல ஆரம்பிச்சுது. அந்த மேடம் வந்து அவங்கள பத்தியும், காலேஜை பத்தியும் தஸ்ஸு புஸ்ஸுன்னு சொல்லி முடிக்க, அடுத்து, நீண்ட நேரமா நான் பயந்து கிட்டு இருந்த இன்ட்ரோடேக்ஷன் வந்துது, ஊர் பேரு மட்டும் கேட்டுட்டு விட்டுடுவாங்கன்னு நினைச்சா, எல்லாரையும் ஒருத்தர் ஒருத்தரா வந்து இன்ட்ரோடேக்ஷன்னோடு ஏதாவது பேசவும் சொல்லிடாங்க.. ஸ்கூல்ல இங்கிலீஷ் நான்-டீடைல் கிளாஸ் ல எல்லாரையும் ஒன் பை ஒன் பூக்லேந்து படிக்க சொல்லும் போது நான், எப்படா பெல் அடிக்கும், ஒருத்தர் 3 நிமிஷம் படிச்சாங்கன்னா இன்னும் எவ்ளோ பெருக்கப்பரம் நம்ம டர்ன் வரும், அதுக்குள்ள பெல் அடிச்சுடுமா என்று கல்குலேத் பண்ணியதெல்லாம் நினைவுக்கு வந்தது.. அந்த வயிற்றில் புளி கரைக்கும் எபெக்டுடன் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். எல்லா பசங்களும் நீ போ நான் போ என்று குசு குசு என்று பேசிகொண்டிருந்த போது. இதெல்லாம் ஒரு பெரிய மட்டேரா என்கிராற்போல் ஒருவன் ஸ்டேஜ் மேலே ஏறினான். அவன் கிளாசுக்கு வந்ததே லேட்டு அப்பறமும் அவன் நடவடிக்கை எல்லாம் நோட் பண்ணும் போது பெரிய இவன் மாதிரி இருந்தான்..

ஸ்டேஜ் மேலே ஏறி நின்று.. " iam balakrishnan" blah blah blah என்று அங்கங்கே மட்டும் புரிகிறாற்போல் இங்கிலிபீஸில் புகுந்து விளையாடினான்.. எனக்கு புரிந்த கொஞ்சத்தையும், அருணுக்கு புரிந்த மிச்சத்தையும் வைத்து பார்த்ததில், அவன் DAV கோபாலபுரத்தில் +2 படித்ததாக தெரிந்தது.. அவன் பேசும் போது "எங்க ஸ்கூல் ல எல்லாம் யார பார்த்தாலும் ரெண்டு கையையும் கூப்பி நமஸ்தே என்று பணிவோடு சொல்லுவோம், நாங்க எந்த எடத்துக்கு போனாலும் இந்த கில்ச்சரை ஸ்பிரெட் பண்ணுவோம், இனிமே நம்ம எல்லாரும் இப்படி தான் கிரீட் பண்ணிக்கணும் " அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டு இருந்தான். இவனோட பேச்செல்லாம் பார்த்தால் (வடிவேலு சொல்வதை போல்) "இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கே" என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

இவன் பேசிய ஸ்டைலையும் ஆக்சென்டையும் பார்த்தவுடன், என் வயிற்றில் ஒரு 100 கிராம் புளி எக்ஸ்ட்ரா வாக கரைய ஆரம்பித்தது. அப்படி இப்படி எல்லாரும் ஒருத்தர் ஒருத்தரா பேசிக்கிட்டே வந்தாங்க.. நம்ம அருண் பயலும் சட்டுனு எழுந்து போய் எதோ சொல்லிட்டு வந்துட்டான். சரி பெல்லடிகரதுக்கு ரொம்ப நாழி இருக்கு நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்று தீர்மானித்தவுடன் , என்ன சொல்ல போறேன் என்பதை யோசித்து கொண்டு ஓரிரு முறை ரிகர்சலும் செய்து பார்த்தேன். பின் எழுந்து போய் ஸ்டேஜில் நின்றால்.. ஒரு 32 பேர் கொண்ட கும்பல் என்னை உற்று நோக்கிக் கொண்டு இருந்தது. ஹும்ம்ம் பட பட வென்று "india is my contry all indians are my brothers and sisters" என்று எனக்கு தெரிந்த இங்கிலிபீஸில் எதையோ சொல்லிவிட்டு, ஓடிவந்து எனது பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ஒரு வழியாக அந்த கிளாஸ் முடிந்தது. எங்களுடன் அந்த பெஞ்சில் balakrishnanum(dav gopalaburam) ஞானாவும் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மூணு பேர் உட்காரும் பெஞ்சாக இருந்தாலும், எப்படியோ அடிச்சு புடிச்சு நாலு பேர் உட்கார்ந்திருந்தோம், காலம் தான் எங்கள் நால்வரையும்அன்று ஒன்று சேர்த்தது, நாங்கள் நால்வரும் அடுத்த ஒரு வருடம் அந்த b செக்ஷனில் என்ன பாடு படப்போரோம்ன்னோ இல்ல என்ன பாடு படுத்தபோர்ரோம்ன்னோ எங்களுக்கு ஒரு க்லுவே இல்ல.

அடுத்த பதிவில் எங்கள் அட்டகாசங்கள் ஆரம்பம்..


1 Comments:

Blogger Palani Murugan N said...

unnoda pataaiya paarthutu oru thadava "yaaru da intha payaan... romba naalavana *irupaan* pola..." apadeenu ennaiyae naan kaetukitu... un pinnalae hostel varaikum vandhutu... appuram unna koopudaratha veenamanu enaku theriyala... kooputa epadi koopudaradhunu theriyala... athunaala hostel varaikum vandhutu appadeeya thirumbitaen... 1 year kalichi paarthaa, neeyum naanum orey section... :D

5:25 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home